/* */

கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது

பத்தமடை பகுதியில் கூலிப்படைக்கு அரிவாள் விநியோகம் செய்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது
X

கைது செய்யப்பட்ட சுடலை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைக் குற்றங்களை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அரிவாள் பட்டறைகளை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து பட்டறை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் சுடலை(55) என்பவர் அரிவாள் பட்டறையில் கூலிபடையினருக்கு அரிவாள்கள் தயார் செய்யப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பத்தமடை பகுதியில் உள்ள சுடலை ஆசாரி என்பவரது பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூலி படையினருக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி பட்டறை உரிமையாளர் சுடலையை பத்தமடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Sep 2021 2:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்