/* */

குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை; தாய் உள்ளிட்ட இருவர் கைது

நெல்லையில் குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை செய்த தாய் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை; தாய் உள்ளிட்ட இருவர் கைது
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த தேவி(24). இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால், குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாக நெல்லை மாவட்டம், முக்கூடல் மயிலபுரத்தைச் சேர்ந்த வியாகம்மாள் மேரியிடம் முறையிட்டுள்ளார்.

அவர், தேவியின் 2 வயது குழந்தையான தர்ஷனாவை விற்பனை செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மயிலபுரத்தை சேர்ந்த ஜான் எட்வர்ட் மற்றும் அற்புதம் ஆகியோரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட தேவி, வியாகம்மாளிடம் குழந்தையை கொடுத்துள்ளார்.

மேலும் தேவியின் வயிற்றில் வளரும் ஆறுமாத கருவையும், மயிலப்புரத்தைச் சேர்ந்த அமலா பாத்திமா மற்றும் செபஸ்டின் ஆகியோருக்கு விற்க மார்கரெட் தீபா(29) ஒப்பந்தம் செய்திருப்பதாக திருநெல்வேலி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்க்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கடந்த 24ம் தேதி, முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுத்தமல்லி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அனிதா (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு விரோதமாக குழந்தையை விற்ற தேவி மற்றும் மார்க்ரெட் தீபா இருவரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 29 Aug 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!