Begin typing your search above and press return to search.
பள்ளக்கால் புதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
பள்ளக்கால் புதுக்குடியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஆட்சியர் வழங்கினார்.
HIGHLIGHTS
பள்ளக்கால் புதுக்குடி அரசுப்பள்ளியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.10 லட்ச ரூபாயை ஆட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு மாணவர் செல்வ சூர்யா உயிரிழந்தார். அம்மாணவனின் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10) இலட்சத்திற்கான காசோலையினை மாணவரின் பெற்றோர் மு.முருகன், உச்சினிமாகாளி ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று (11.05.2022) வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், ஆகியோர் உள்ளனர்.