/* */

அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் கைது
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமது மைதீன்(19), அவரது நண்பர்களுடன் நேற்று முன்தினம் ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மூக்கையா என்கிற நாகராஜன்(24) வழிமறித்து உங்களது பெயர் என்ன என கேட்டுள்ளார். முகம்மது மைதீன் மற்றும் அவரது நண்பர்கள் பெயரை கூறவும், மூக்கையா அவர்களை அவதூறாகப் பேசி, கீழே கிடந்த செங்கலால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து முகமது மைதீனின் தந்தை சேக் பீர்முகம்மது(54), கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முருகேஷ் விசாரணை மேற்கொண்டு செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூக்கையா என்கிற நாகராஜனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்