/* */

மகசூல் அதிகரிக்க அற்புத யோசனை தரும் வேளாண் அதிகாரி!

மகசூல் அதிகரிக்க அம்பாசமுத்திரம் வேளாண் அதிகாரி அற்புதமான யோசனை!

HIGHLIGHTS

மகசூல் அதிகரிக்க அற்புத யோசனை தரும் வேளாண் அதிகாரி!
X

விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன செய்யலாம் என அவர்களுக்கு யோசனை கூறும் வகையில் அம்பாசமுத்திர வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை என்பது தமிழ் முதுமொழி. ஆற்று வண்டல் மண்ணை வயலில் போட்டால் மண்ணின் வளம் காக்கப்பட்டு பயிரின் மகசூல் அதிகரிக்கும் என்பது இதன் பொருள்.

வண்டல் மண்ணை வயலில் இடுவதால் வயல் மண்ணின் வேதியியல் தன்மை மாறுகின்றது. இதனால் வண்டல் மண்ணில் தண்ணீர் தேங்கும் திறன் அதிகமாகிறது. அதிக தண்ணீரைத் தக்க வைப்பதால் அமில காரத் தன்மையும் மேம்படுத்தப்பட்டு ஈரப்பதமும் அதிகரிக்கிறது. கரிம அளவு மற்றும் நுண்ணுயிர்களின் பெருக்கமும் அதிகரிக்கின்றன. மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தக சத்து என அதிகரிக்கின்றன. இதனால் மண்ணின் ஆரோக்யம் மேம்படுகின்றன. பயிரின் மகசூல் அதிகரிக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பொதுப்பணித்துறை குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு கண்டறியப்பட்ட குளங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

கோடாரங்குளத்தில் இடைமலைக்குளம், மேல அம்பாசமுத்திரத்தில் மேல இடையன்குளம், கீழ இடையன்குளம், ரெங்கை யன் குளம், பல்லாங்குளம், ஏகாம்பர புரத்தில் பெட்டை குளம், உசிலம் குண்டு குளம், திருநாண் குளம், அடைய கருங்குளம் கல்சூந்துகுளம், குமார தீர்த்துகுளம், வாகை குளம் கிராமத்தில் சிறுங்க ன்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்த சுமை தாங்கி குளம், சீர்மாதங்குளம், வைராவிகுளம் கிராமத்தில் வைராவிகுளம், கீழ்முகத்தில் குறிப்பான்குளம், அயன்சி ங்கம்பட்டி கிராமத்தில் சிங்கம்பட்டி தெற்குகுளம், சிங்கம்பட்டி வடக்குகுளம், தெற்கு பாப்பான்குளத்தை சார்ந்த கரடிகுளம், உப்பு கரைகுளம், ஆலடிகுளம், அய்யப்ப சேரிகுளம், ஆத்தியா ன்குளம்.

இந்த குளங்களிலுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுக்க அனுமதி அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம். அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களுக்குத் தேவையான வண்டல்மண் எடுக்க தங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு மனு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Updated On: 28 May 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...