/* */

கொரோனா எதிரொலி -கோவில் தேரோட்டங்கள் ரத்து

கொரோனா எதிரொலி -கோவில் தேரோட்டங்கள் ரத்து
X

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற உலகாம்பிகை சமேத பாபநாசர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை விசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி காலை கொடியேற்றதுடன் துவங்கியது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பாபநாசம் கோவில் தேரோட்டம் தற்போது ரத்து செய்யபட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போல் அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் மற்றும் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவில்களிலும் முக்கிய நிகழ்வான அங்கப்பிரதட்சணம் கும்பிடு நமஸ்காரம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On: 11 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...