/* */

பாபநாசம், காரையார் அணையில் குறைந்த நீர் இருப்பு

பாபநாசம், காரையார் அணையில் குறைந்த நீர் இருப்பு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் காரையார் அணையில் 105 அடி நீர் இருப்பு உள்ளதால் தண்ணீர் சிக்கனம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள காரையார் சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் உள்ளது .முறையே 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையில் தற்போது 105 .45 அடி இருப்பு உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 104. 45 கன அடி, 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 94.40 அடி நீர் இருப்பு உள்ளது.200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது ஆனால் அணைக்கு 8 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் தேவைக்கும் இந்த அணை பயன்பட்டு வருகிறது.

தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு காரையார் அணை நீர்மட்டம் 105 அடி மிகையாகவே உள்ளது. இந்த ஆண்டு பிசான சாகுபடிக்கு தண்ணீர் போதிய அளவில் உள்ளது. மேலும் மூன்று போகம் நெல் பயிர் விளையும் அளவிற்கு பொதுப்பணித்துறையினர் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்தி தர விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 April 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  2. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  3. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  4. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  5. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  6. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  8. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  9. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...