/* */

பாபநாசம் காரையார் அணையில் 105 அடி நீர் இருப்பு

பாபநாசம், காரையார் அணையில் 105 ஆதி தண்ணீர் இருப்பு உள்ளது.

HIGHLIGHTS

பாபநாசம் காரையார் அணையில் 105 அடி நீர் இருப்பு
X

காரையார் அணை (ஃபைல் படம்)

பாபநாசம் காரையார் .அணையில் 105 அடி நீர் இருப்பு கடும் கோடையில் 'தண்ணீர் சிக்கனம் தேவை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடுமையான கோடை வெயில் தாக்கம் அதிகம் இருந்தாலும் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அணைகளில் நீர்இருப்பு கணிசமான அளவு இருந்து வருகிறது. அம்பாசமுத்திரம் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள காரையார், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் உள்ளன.

முறையே 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையில் தற்போது 105.45 அடி இருப்பு உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 104. 45 கன அடி. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 94.40 அடி நீர் இருப்பு உள்ளது. 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால், அணைக்கு 8 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவைக்கு திறந்து விடப்படுகிறது. மேலும் நெல்லை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் தேவைக்கும் இந்த அணைதண்ணீர் பயன்பட்டு வருகிறது.

தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும்நீர் வரத்து மிகவும்குறைவாக சள்ளது ஆனால்கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு காரை யார் அணை நீர்மட்டம் 105 அடி மிகையாகவே உளளது. இந்த ஆண்டு பிசான சாகுபடிக்கு தண்ணீர் போதிய அளவில் உள்ளது.

மேலும், மூன்று போகம் நெல் பயிர் விளையும் அளவிற்கு பொதுப்பணித் துறையினர் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்தும் விதமாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 April 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா