/* */

நெல்லை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது - அரிசி மூட்டைகள் பறிமுதல்.

கடத்தல் ரேசன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தில் ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது. 30 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வி.கே.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ். ஐ. சிவதாணு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவந்திபுரம் வாணிகர் தெருவில் 30 மூட்டை ரேசன் அரிசி மற்றும் பைக்குடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில்குளத்தைச் சேர்ந்த துறைகுட்டி மகன் கார்த்திக் (23) என்பதும், இவர் ரேசன் அரிசியை மொத்தமாக வாங்கி கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் வேறு யாருககாவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  4. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  9. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?