/* */

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக்கைதி : தனிப்படை போலீசார் கைது

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

HIGHLIGHTS

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக்கைதி : தனிப்படை போலீசார்  கைது
X

நெல்லையில் தனிப்படை போலீசாரால் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி பாச்சாத்து.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைத்தில் பதிவான வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கைதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையம் கெளதமபுரி கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் பச்சாத்து (72) என்பவர், அம்பை காவல் நிலைய (குற்ற எண் - 727/ 1992 U|S 302 ) வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதற்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல் முறையீடு காலத்தில் ஜாமீனில் வெளியில் இருந்து வந்தார். மேல் முறையீட்டு மனுவுக்கான தீர்ப்பில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளி பாச்சாத்து தலைமறைவாகி விட்டார். 1998 ஆம் ஆண்டிலிருந்து குற்றவாளி பச்சாத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று வரை நிலுவையில் இருந்து வந்தது.

இது பற்றி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. குற்றவாளியை கைது செய்து பிடியாணையை தாமதமின்றி நிறைவேற்ற தலைமறைவான கைதியைப் பிடிக்க வேண்டுமென, அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சந்திரமோகன்சைமன்சாம்பாகூர் மற்றும் காவல் துறையினர் சண்முகபாண்டியன், ராமர், பெருமாள், ராஜேஷ், மற்றும் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்தி தேடுதல் வேட்டையில் மேற்படி குற்றவாளி பாச்சாத்து(72) வை 29.08.2021 இன்று கைது செய்தனர். இதன் மூலம், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பிடியாணையை நிறைவேற்றி, குற்றவாளியை முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 29 Aug 2021 6:46 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை