/* */

சாலையில் கிடந்த பணம்- போலீசில் ஒப்படைத்த நேர்மை பெண்

சாலையில் கிடந்த பணம்- போலீசில் ஒப்படைத்த நேர்மை பெண்
X

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலையில் கிடந்த ரூ. 58 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி முக்கூடல் காவல்துறையினர் அந்த பெண்ணுக்கு பரிசளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி வாட்டர் டேங்க் தெரு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் மாரியம்மாள் (19), என்பவர் பழைய பேப்பர், பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வருகிறார். சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்த ஒரு மணிபர்ஸை எடுத்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோது அதில் 58,210 ரூபாய் பணமும், ஆண்ட்ராய்டு செல்போனும், ஆதார் கார்டு இருப்பதை கண்டு முக்கூடல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அதை ஒப்படைத்துள்ளார்.

பின் மணிபர்ஸின் உரிமையாளர் சேரன்மகாதேவி காயிதேமில்லத் தெருவை சேர்ந்த ஜாஸ்மின் நிஷா என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் காவல் நிலையம் வந்து பணம் மற்றும் செல்போன்களை பெற்றுக் கொண்டார். மாரியம்மாளின் நேர்மையை பாராட்டி திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் துறையினர் அப்பெண்ணை நேரில் அழைத்து குத்து விளக்கை பரிசாக அளித்தனர். மாரியம்மாளின் இச்செயலை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 22 April 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?