/* */

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

மின் ஊழியர்கள் பணி நேரத்தில் பாதுகாப்பாக பணி செய்வது எப்படி, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்கில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
X

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. சேரன்மாதேவி மின்வாரிய அலுவலக ஊழியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மேற்பார்வை மின் பொறியாளர் ராஜராஜன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ், சுவாமிநாதன், திரிசங்கு, உதவி மின் பொறியாளர் கைலாச மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் மின் ஊழியர்கள் பணி நேரத்தில் பாதுகாப்பாக பணி செய்வது எப்படி, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரிடர் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் சேரன்மாதேவி, கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர்கள், களப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 April 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு