/* */

வாகைபதியில் அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழா

வாகைகுளம் வாகைபதி ஸ்ரீ மன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி மாசி ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாகைபதியில் அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழா
X

வாகைகுளம் வாகைபதி ஸ்ரீ மன் நாராயண சுவாமி திருக்கோயிலில்,  அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி நடைபெற்ற ஊர்வலம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள வாகைகுளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில், அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி, மாசி மகா ஊர்வலம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கியது. இதற்காக 40க்கும் மேற்பட்ட பகுதியில் உள்ள பதிகளில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமன் காளை, கருடன், நாகம், உள்ளீட்ட பல்வேறு வாகனங்களில் வந்து திருநாமம் கிருஷ்ணன் கோவில் முன்பு சங்கமித்தது.

பின்னர் அங்கிருந்து வாகைகுளம் வாகைபதிக்கு அய்யாவின் அன்பு கொடி மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் அய்யாவின் அன்பு கொடி பக்தர்களும், சிறுவர்களும், பெரியோர்களும், அய்யா நாமத்தை முழங்கியபடியும், ஆண்கள், சிறுமிகள் கும்மி அடித்தும் சென்றனர்.

தொடர்ந்து வாகைகுளம் வாகைபதி குளத்தில் அய்யா புனித நீராடினார். ஊர்வலத்தில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அம்பாசமுத்திரம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 5 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்