/* */

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

HIGHLIGHTS

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
X

நெல்லை மாவட்டம் பத்தமடை அடுத்துள்ள கேசவன்சமுத்திரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

நெல்லை மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவன்சமுத்திரத்தை சேர்ந்த பாரத் என்பவர் நேற்று அப்பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு அவரது நண்பர் சந்தானத்துடன் சென்றுள்ளார். அப்போது சந்தானம் வேறு பாடல் போடுமாறு ரமேஷ் என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் ரமேஷுக்கும், சந்தானத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சண்டைக்கு பாரத் தான் காரணம் என்று அருகில் நின்று கொண்டிருந்த கேசவசமுத்திரத்தை சேர்ந்த செல்வம்(31), ஆயிரத்தான் என்ற முண்டகண்ணன் (26), குட்டி(24) மற்றும் ஆயிரத்தான்(29), ஆகியோர் அவரை அவதூறாக பேசி, கையால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாரத் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பொன்னுசாமி விசாரணை மேற்கொண்டு பாரத்தை அடித்து காயப்படுத்திய 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 27 Aug 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  7. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  8. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  9. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு