/* */

நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.

அம்பாசமுத்திரம் அருகே, நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.

HIGHLIGHTS

நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை  நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.
X

உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதசடங்கின்படி கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.

சேரை அருகே 77 வயது மூதாட்டி கொரானா அறிகுறியுடன் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய உதவி கோரியபோது, நோன்பு திறந்ததும் நல்லடக்கம் செய்து தருகிறோம் என்று வாக்களித்தார். இன்று காலை நோன்பு வைத்த நிலையில் மேலப்பாளையம் இடுகாட்டில் நல்லடக்கம் ‌செய்தனர்‌

இரவு சுகாதார ஆய்வாளரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் சேரை சித்தீக் அம்பை தொகுதி செயலாளர் டாடா சேக், அம்பை ஹபீப், டிரைவர் மைதீன்,கல்லிடை தன்சீர் தலைமையிலான தன்னார்வ மீட்புக்குழுவினர், மாநகராட்சி பகுதியில் இறந்த 43 வயது ஆணின் உடலை பெற்று எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் மூலம் கல்லறை தோட்டம் கொண்டு சென்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதசடங்கின்படி கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்தனர்.

இதனை தொடர்ந்து மூன்றாவதாக, கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52வயது நபர் கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலை 7.30 அளவில் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சேரை இடுகாட்டில் அவரது மதசடங்கின்படி நல்லடக்கம் செய்தனர்.

எஸ்டிபிஐ கட்சி தன்னார்வ குழுவினர் நோன்பு வைத்த நிலையிலும் நோன்பு திறந்த நிலையிலும் மூன்று பேரின் நல்லடக்கத்திற்கு செய்த மனிதநேய பணிகளை உறவினர்கள் அதிகாரிகள் பாராட்டினார்.

Updated On: 29 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!