மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரச்சார பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரச்சார பொதுக்கூட்டம்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் அரசியல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. பிருந்தா காரத் பங்கேற்பு.

தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தாமிரபரணி பாதுகாப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சார பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் வரவேற்புரையாற்றினார்.

நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் மல்லிகா தென்காசி மாவட்ட செயலாளர் முத்துபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் நூர் முகமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இது நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future