தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு-பொதுமக்கள் மீட்பு

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு-பொதுமக்கள் மீட்பு
X

திருநெல்வேலி தாமிரபரணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்புகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால், உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ள பெருக்கு ஓடுவதால், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வெள்ளம் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!