/* */

திருநெல்வேலி-தென்காசி ரயில் பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மார்ச் 13 இல் ஆய்வு

திருநெல்வேலி-தென்காசி ரயில் பாதை மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகள் மார்ச் 13 ஆம் தேதி ஆய்வு செய்கின்றனர்.

HIGHLIGHTS

திருநெல்வேலி-தென்காசி ரயில் பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மார்ச் 13 இல் ஆய்வு
X

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி- தென்காசி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி அண்மையில் முடிவடைந்தது. அங்கு விரைவில் ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் (Principal Chief Electrical Engineer) திருநெல்வேலி- தென்காசி ரயில் பாதையை ஆய்வு செய்ய உள்ளார். மார்ச் 13 ஆம் தேதி நடைபெறும் ஆய்வில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் மற்றும் தெற்கு ரயில்வே தலைமையகம், ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் மதுரை கோட்டத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்த ஆய்வு திருநெல்வேலியில் காலை 9:30 மணிக்கு தொடங்கி, மதியம் 1:45-க்கு தென்காசியில் முடிவடைகிறது. தொடர்ந்து அதிவேக சோதனை ஓட்டம் உள்ளிட்ட ஆய்வுகள் மாலை 4:30 மணியளவில் திருநெல்வேலியில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - தென்காசி பிரிவு:

மதுரை ரயில்வே கோட்டத்தில் திருநெல்வேலி- தென்காசி பிரிவின் மொத்த தூரம் (Route Kilometre ) 72.02 கிலோ மீட்டர் ஆகும். இந்த பிரிவில் உள்ள மொத்த இருப்புப்பாதை தூரம் (Track Kilometre) 81.51 கிலோ மீட்டர் ஆகும். இந்தப் பிரிவில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்ச்சத்திரம் மற்றும் தென்காசி ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன.

ரயில்வே மின்மயமாக்கலின் ஒரு பகுதியாக வீரவநல்லூரில் புதிய துணை மின் நிலையம் தொடங்கப்பட உள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், மின்மயமாக்கும் பணி, விருதுநகர் - தென்காசி 122.16 கிலோ மீட்டர், தென்காசி- பகவதிபுரம் 14.105 கிலோ மீட்டர் தூரம் மற்றும் எடமண் -புனலூர் 8.428 கிலோ மீட்டர் பிரிவுகளில் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 11 March 2023 2:23 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்