Begin typing your search above and press return to search.
அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை
அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தின் மழை நிலவரங்களை வானிலை ஆய்வு மையம் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவும் தனது டுவிட்டர் பக்கங்கங்களில் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.