/* */

கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

கோவையில் சூறாவளி காற்றில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
X

கோவை அருகே இன்று ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டியில் ஒரு தனியார் தோட்டத்தில் ராட்சத விளம்பர பேனர்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக சுமார் 80 அடி உயரத்தில் இரும்பு குழாய்கள் மற்றும் இரும்பு தூண்கள் கொண்டு விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் கோவையில் திடீரென சூறாவளி காற்று வீசியது . சூறைக்காற்று வீசியதால் இரும்பு கம்பிகள் மற்றும் விளம்பர பேனர்கள் சரிந்து விழுந்தன. இதில் அந்த பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விளம்பர பேனர்களை அமைத்தது யார்? எந்த நிறுவனத்திற்காக இது அமைக்கப்பட்டது, இறந்த தொழிலாளர்களின் குடும்ப விவரங்கள் பற்றி போலீசார் தகவல் சேகரித்து வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக கோவை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் வேடிக்கை பார்ப்பதற்காக ஏரளமானவர்கள் வாகனங்களுடன் கூடி நின்றனர். போலீசார் தலையிட்டு வாகனப் போக்குவரத்தினை சரி செய்தனர்.

Updated On: 2 Jun 2023 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது