/* */

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

வங்கக்கடலில் சுழல் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை

HIGHLIGHTS

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
X

மீன்பிடித்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் - கோப்புப்படம் 

வங்கக்கடலில் சுழல் காற்று சுமார் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையையடுத்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழல் காற்றானது 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசக் கூடும் என்பதாலும், கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவளத்துறை அறிவித்துள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்கவும், மீன்பிடி சாதனங்களை பத்திரமாக வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், விசைப்படகுகள், பைபர்படகுகள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

Updated On: 2 Jan 2024 10:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!