/* */

விளாத்திகுளம் அருகே 50 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

விளாத்திகுளம் அருகே 50 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
X

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்வ மரத்து பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (30.06.2021) விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்வ மரத்து பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் 50 கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. போலிசார் நடத்திய விசாரணையில் அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் அந்த வாகன ஓட்டுனரான ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காமராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ராம செல்வம் (34) என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், ரேசன் அரிசி மூட்டைகளையும் போலிசார் பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 1 July 2021 1:57 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!