கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் திருடியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ராஜிவ் நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் கோவிலின் பின்புறம் உள்ள கதவினை கடப்பாறை மற்றும் அரிவாளால் உடைத்து கோவிலுக்குள் சென்று அங்குள்ள உண்டியலை உடைத்து சுமார் ரூ.8000 -த்தை திருடி சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல கோவிலுக்கு பூஜை செய்வதற்காக காலை சென்ற பூசாரி மணிமுருகன் கோவிலின் பின்புற கதவு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து விளாத்திகுளம் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கைரேகை பிரிவிற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் திருடிச் சென்ற நபர் உண்டியலை உடைப்பதற்கு கொண்டு வந்த கடப்பாறை மற்றும் அரிவாளை அங்கேயே விட்டுச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story