/* */

பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று (27.06.2021) தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மக்கள் நீதி மய்யம் விஜயகாந்த், சுப்பிரமணியன், கணேசன், நல்லசிவம், ராமராஜன், கருப்பசாமி, பிரிட்டோ, சிவக்குமார், மாரிமுத்து, அர்ஜுன், கமல் மூர்த்தி மற்றும் தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சேர்ந்த ராஜன், பரமசிவம், சபரி, வசந், பாண்டி, விசு, சங்கர், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 27 Jun 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!