/* */

திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
X

திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அருள்குமரன் (25). இவர் பிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு திருச்செந்தூரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் இவருக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் விரக்தியில் இருந்து வந்தார். தினமும் இவர் அதிகாலை 3 மணிக்கு தூங்கி விட்டு பகலில் எழுந்திருப்பது வழக்கமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தனது அறையில் தூங்கச் சென்றவர் மதியம் வரை வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் நாகரத்தினம் அறையின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் அருள்குமரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Dec 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’