/* */

திருச்செந்தூர் கோயிலில் செப்டம்பர் மாதம் ரூ. 2.93 கோடி உண்டியல் வசூல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்டம்பர் மாத உண்டியல் வருமானமாக ரூ. 2.93 கோடி கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

திருச்செந்தூர் கோயிலில் செப்டம்பர் மாதம் ரூ. 2.93 கோடி உண்டியல் வசூல்
X

திருச்செந்தூர் முருகன் கோயில். (கோப்பு படம்).

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, கந்த சஷ்டி விழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது உண்டு.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தவது வழக்கம்.

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சையாக கோயில் உண்டியலில் பணம், தங்கம் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துவது உண்டு. அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

அதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை என்னும் பணியானது கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்ப் பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுப்பட்டனர்.

காணிக்கை எண்ணும் பணி முடிவடைந்த நிலையில், செப்டம்பர் மாதம் வருவாயாக 2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 ரூபாய் பணமும், தங்கம் 2100 கிராமும், வெள்ளி 19,000 கிராமும், 424 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 28 Sep 2023 1:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்