/* */

ஆத்தூர் அருகே கடற்கரையில் விளையாடிய மாணவன் மாயம்

ஆத்தூர் அருகே, கடற்கரையில் விளையாடிய கடலில் சிக்கி மாயமான மாணவரை, அப்பகுதி மீனவர்கள் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

ஆத்தூர் அருகே கடற்கரையில் விளையாடிய மாணவன் மாயம்
X

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் நூறுவீடு பகுதியை சேர்ந்த ரோசில்டன் மகன் ஜாப்ரின் (15), ஏசியா தெருவை சேர்ந்த கில்பர்ட் மகன் அலெக்ஸ் (15), தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆஸ்ரின் (15) ஆகியோர் புன்னைக்காயல் கடற்கரை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது 3 பேரும் கடல் அலையில் சிக்கி தத்தளித்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அலெக்ஸ் மற்றும் ஆஸ்ரின் ஆகியோரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தனர். ஆனால் ஜாப்ரினை மட்டும் காணவில்லை. இதுகுறித்து உடனடியாக கடலோர காவல்படை, தீயணைப்புத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் காணாமல்போன ஜாப்ரினை, அப்பகுதி மீனவர்கள் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புத்துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கடலில் தேடி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!