/* */

திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளி கைது

திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளி கைது
X

திருச்செந்தூரில் கைதான தொழிலாளி பிரபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தலை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெயபாண்டியன் (30). இவரது வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து ஜெயபாண்டியன் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், ஜெயபாண்டியனின் வீட்டில் கடந்த மாதம் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்தவரான திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெயபாண்டியனின் வீட்டில் புகுந்து அங்கு பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றது பிரபாகரன் தான் என தெரியவந்தது.

உடனே, தனிப்படை போலீஸார் பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்த 12 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் மதியப்புள்ள 35 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Updated On: 2 March 2023 5:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...