/* */

தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.25 கோடி மோசடி.. அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.25 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்தாக அரசு மாணவர் விடுதி காப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.25 கோடி மோசடி.. அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது...
X

தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (37). இவர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி 11 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாயை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், விளாத்திகுளம் புதூரில் வைத்து அலெக்சாண்டரை கைது செய்த தனிப்படை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு பேரூரணி சிறையில் அடைத்தனர். போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி ஒரு கோடியே 26 லட்சத்து 68 ஆயிரத்து 500 ரூபாய் வரை பணம் பெற்று கொண்டு மோசடி செய்தது தெரியவந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

Updated On: 15 March 2023 4:07 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!