/* */

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் ரூ. 37 லட்சம் மோசடி.. நைஜீரியா இளைஞர் கைது...

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞரை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் ரூ. 37 லட்சம் மோசடி.. நைஜீரியா இளைஞர் கைது...
X

ஆன்லைன் மோசடியில் கைது செய்யப்பட்ட நைஜீரியா இளைஞர் இஷி பெடிலிஸ் நுடுபியூஸி மற்றும் அவரை கைது செய்த போலீஸார்.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பனிமய க்ளாட்வின் மனோஜ் (38). அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் டோகோவில் இருக்கும் Vetis Animal Health Industry என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றுமதி செய்ய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அந்த தகவலை உண்மை என நினைத்து 36 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டதாகடி பனிமய கிளாட்வின் மனோஜ் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.


அவரது புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் மேற்பார்வையில் உள்ள சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து பணத்தை மீட்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) (வயது 42) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்தும், போலியான வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீஸார் எதிரி இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) என்பவரை மும்பை சென்று மும்பையில் உள்ள உல்வே நோட் என்ற பகுதியில் வைத்து கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோல் பல நபர்களை இஷி பெடிலிஸ் நுடுபியூஸி ஏமாற்றி இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்று பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட இஷி பெடிலிஸ் நுடுபியூஸியை கண்டுபிடித்து கைது செய்த சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 3 Jan 2023 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!