/* */

சாலை புதுப்பிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை

மெய்யூர் முதல் கொட்டங்காடு இடையே சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சாலை புதுப்பிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை
X

உடன்குடியில் இருந்து திசையன்விளை செல்லும் சாலை ஒரு முக்கியமான போக்குவரத்து நிறைந்த சாலையாகும். திசையன்விளை, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, மணிநகர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் உடன்குடி ஊருக்குள் வருவதற்கு முன்பே, மெய்யூர் அருகே ஒரு பிரிவு ரோட்டில் பிரிந்து சென்று கொட்டங்காடு குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கு ஒரு பைபாஸ் சாலை உள்ளது.

இந்த சாலையில் மெய்யூர் முதல் கொட்டங்காடு வரை உள்ள இணைப்பு சாலை குண்டும் குழியுமாக பயணத்திற்கு பயன்படாத சாலையாக இருந்தது.இதை புதுப்பித்து போடுவதற்காக கற்களை குவியல் குவியலாக ,ரோட்டின் குறுக்கே குவித்து வைத்துவிட்டனர். இதனால் இவ்வழியாக போக்குவரத்து தடைபட்டது. சுமார் ஒரு மாதமாக இந்த ஜல்லி குவியல்கள் அப்படியே கிடக்கிறது.

உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடும் பணியை தொடங்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 15 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...