/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி எஸ்பி, மாநகராட்சி ஆணையர் ஆய்வு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று மனுதாக்கல் தொடங்கும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி எஸ்.பி, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி எஸ்பி, மாநகராட்சி ஆணையர் ஆய்வு
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர்,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, வேட்புமனு தாக்கல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் 3 ஆய்வாளர்கள் தலைமையில் 45 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வேட்பு மனு படிவங்கள் பெறுபவர்கள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மட்டுமே மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேட்பு மனு தாக்கல் சம்மந்தமான அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 15 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 18 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. அனைத்து வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 28 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...