/* */

தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க்கின் அதிரடி பிளான்... கொலை சதித் திட்டம் தீட்டிய 5 பேர் கைது..

தென் மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க் தீட்டிய அதிரடித் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி அருகே கொலை சதிச் செயலில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க்கின் அதிரடி பிளான்... கொலை சதித் திட்டம் தீட்டிய 5 பேர் கைது..
X

கைதானவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள்கள்.

தென் மாவட்டங்களில் நிலவி வரும் சமுதாய மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

இந்த நிலையில், தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவின்படி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் மேற்பார்வையில் தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு (3 Tier Monitoring System) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் விளைவாக, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்ட விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ரகசியமாக கூடி இருப்பதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

மேலும், அங்கு சட்ட விரோதமாக கூடியிருந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 பெரிய அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் குலசேகரநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த முத்துமாரியப்பன் (23), சீவலப்பேரி மடத்துப்பட்டியைச் சேர்ந்த சிவமுருகன் (22), ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிவபிரகாஷ் (19), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ்நகரைச் சேர்ந்த முத்துராமன் (23) மற்றும் கவர்னகிரி சுந்தரலிங்கம்நகரைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், விசாரணையில், முத்துமாரியப்பன் என்பவருக்கும், குலசேகரநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளதும், அதன் காரணமாக 7 மாதத்திற்கு முன்னர் மாயகிருஷ்ணனை முத்து மாரியப்பன் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் முத்துமாரியப்பனை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர் என்பதும் தெரியவந்தது.

முத்துமாரியப்பன் கடந்த 27.10.2022 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் விடுதலை ஆனதை அறிந்து மாயகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை உட்பட சிலர் முத்துமாரியப்பனை அரிவாளால் தாக்கி உள்ளார். இதில் முத்துமாரியப்பன், மாயகிருஷ்ணனிடம்இ ருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மதுரை சென்று அங்கு தங்கி இருந்து உள்ளார்.

மதுரையில் இருந்த முத்துமாரியப்பன், மாயகிருஷ்ணனை தீர்த்துக்கட்டினால் தான் வாழமுடியும் என்று அவரை கொலை செய்வதற்காக மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்று அங்கிருந்து மற்ற 4 நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓட்டப்பிடாரத்திற்கு வந்து ரகசியமாக தனது வீட்டில் நண்பர்களுடன் பதுங்கி இருந்துள்ளார்.

இந்த கொலை சம்வத்தை அரங்கேற்றுவதற்கு அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால் அந்த வழியாக சென்ற ஒருவரை வழிமறித்து, அரிவாளை காண்பித்து மிரட்டி அவரிடம்இருந்து 5000 ரூபாய் கொள்ளையடித்துள்ளதும், இன்னும் பலரிடம் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

3 அடுக்கு பாதுகாப்பில் சரியான தருணத்தில் மாவட்ட தனிப்பிரிவு உளவுத் துறையினர் ஆங்காங்கே துப்புகள் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால், சட்ட விரோதமாக கூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தனிப்படை போலீஸார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 பெரிய அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழிக்குப்பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய கும்பலை 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் தீவிர கண்காணிப்பில் துரிதமாக செயல்பட்டு கொலையை தடுத்த ஓட்டப்பிடாரம் தனிப்பிரிவு காவலர் பாலமுருகன் மற்றும் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் தலைமையிலான தனிப்படையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Updated On: 25 Nov 2022 4:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...