/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
X

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர் தற்போது வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, இந்திரா காலனி, காமராஜ் நகர் மாதாங்கோயில் தெரு, நாணல்காடு, கிராமத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஏற்பாட்டில் 2000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்த மழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதித்தது. குறிப்பாக, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் வட்டாரப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியவில்லை. ஆனால், அதை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக களத்துக்கு வந்து மக்களோடு நின்றார். தற்போது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூ. 6000 என்பது போதாது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணி என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து குளங்கள் தூர்வாரப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

அந்தத் திட்டத்தை தொடர்ந்து இருந்தால் இந்த பேரழிவு நடந்திருக்கிறது. முறையாக குளங்களை தூர் வாரி இருந்தால் இந்த இழப்பை சந்திக்க தேவையில்லை. மாநிலத்தில் உள்ள தி.மு.க. ஆட்சி கண்டும் காணாமல் இருப்பது போல் இல்லாமல் மத்திய அரசு இந்த மக்களை காப்பத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Updated On: 28 Dec 2023 1:47 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...