/* */

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவு படுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

கோவில்பட்டி மந்தி தோப்பு சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவு படுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
X

கையெழுத்து பெறப்பட்ட மனு மாவட்ட ஆட்சியருக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக கோவில்பட்டி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. தீப்பெட்டி தொழில், கடலைமிட்டாய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் உள்ளதால் நகரம் விரிவடைந்து மக்கள் குடியேறி வருகின்றனர்.

இதனால், மக்கள் குடியேறும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, கோவில்பட்டியில் இருந்து குருமலை வழியாக கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோவில்பட்டியில் இருந்து குருமலை வழியாக கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்களை கோரிக்கை மனுவோடு இணைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தபால் அனுப்பப்பட்டது.

நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, முனைவர் சம்பத்குமார், ஐஎன்டியுசி ராஜசேகரன், உரத்தசிந்தனை சிவானந்தம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மேரிஷீலா, தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பாபு, மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் கட்சி ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Dec 2023 12:43 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை