/* */

கோவில்பட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்

கோவில்பட்டி அருகே அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவில்பட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
X

கோவில்பட்டியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர். குமாரபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவியும், நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் பகுதியை சேர்ந்த 21 குழந்தைகள் என 22 பேர் பயின்று வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி மழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

குமாரபுரம் பள்ளியில் நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் சேர்ந்த குழந்தைகள் தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், மேலும் பள்ளிக்கு சென்றுவர போதுமான வசதி இல்லை என்றும், மெயின் ரோடு பகுதியில் வாகனங்கள் அதிகமாக செல்வதால் அந்தவழியாக குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், விவசாய நிலங்கள் வழியாக குழந்தைகள் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் அந்தப் பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும், சிலர் தங்களது நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து விடுவதால் பள்ளிக்கு குழந்தைகள் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பள்ளியை வடக்கு குமாரபுரத்திற்கு மாற்ற வேண்டும், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் அதுவரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி கடந்த 9 ஆம் தேதி முதல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் தங்களது கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று அந்தப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டு தங்களது குழந்தைகளின் கல்வி மாற்றுச் சான்றிதழ் (TC) தர வலியுறுத்தி அங்குள்ள ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் இது குறித்து கல்வித்துறை மேல் அதிகாரிகளிடம் கேட்ட பின்னர் பள்ளி மாற்றுச் சான்றிதழை தருகிறேன் என ஆசிரியர் கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 24 Nov 2023 3:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!