/* */

பறவைக்காய்ச்சல் எதிரொலி : கோடிகளில் ஆடு விற்பனை

பறவைக்காய்ச்சல் எதிரொலி : கோடிகளில் ஆடு விற்பனை
X

கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று உள்ளதால் வியாபாரிகள், ஆடுகள் வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மாவட்டத்தில் ஆடுகள் விற்பனைக்கு புகழ் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. மதுரை, தேனி, விருதுநகர், சென்னை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் வருவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில் இந்த வார ஆட்டுச்சந்தை களைகட்டியது. கடந்த சில வாரங்களை விட இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் பத்தாயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.

10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று ரூபாய் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. குட்டி ஆடுகள் முதல் பெரிய ஆடுகள் வரை எடைகளுக்கு ஏற்ப ரூ 4 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. மேலும் தற்போது பறவை காய்ச்சல் அதிகரித்துள்ளதாலும், பொதுமக்கள் பார்வை ஆட்டிறைச்சி மீது திரும்பியுள்ளதால் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விளையும் கடந்த சில வாரங்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.

Updated On: 9 Jan 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு