கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் தெப்பத் திருவிழா

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் தெப்பத் திருவிழா
X
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த திருக்கோவிலின் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடந்தன. 9ம் திருநாளான 13ம் தேதி தேர் திருவிழாவும், 10ம் திருநாளான 14ம் தேதி தீர்த்தவாரி தீபாராதனையும் நடைபெற்றது.

11ம் திருநாளான நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை நேற்று அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் மாலை ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோவிலில் இருந்து புறப்பட்டு, மெயின் ரோட்டில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, கோவில் தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தெப்பத் திருவிழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் வகித்தார். தெப்பத் திருவிழாவை கோவில்பட்டி காவல் துறை டி.எஸ்.பி., உதயசூரியன் துவங்கி வைத்தார். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், கோவில் செயல் அலுவலர் நாகராஜன், நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபால், பொருளாளர் சுரேஷ்குமார், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், உட்பட நாடார் உறவின் முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி, கோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தெப்பத் திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story
ai and iot in healthcare