/* */

கோவில்பட்டி அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிக்கை

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அனைத்து ரத்ததானக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிக்கை
X

மனு அளித்த ரத்ததானக் கழகத்தினர்.

இது தொடர்பாக, மாவீரன் பகத்சிங் ரத்ததானக் கழக நிறுவனர் காளிதாஸ் தலைமையில், ரத்ததானக் குழுவினர், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் அளித்த மனுவின் விவரம்:

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாகவுள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சி.டி.ஸ்கேன் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் வேலைநேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை மனு அளித்தும், எவ்வித பலனும் கிடைக்கவில்லை. எனவே, இக்கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 16ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 9 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!