/* */

கோவில்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

கோவில்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
X

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம்.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10, 11 மற்றும் 12 வகுப்புகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார் மற்றும் அந்தந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா? கழிப்பறை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் சரியான முறையில் உள்ளதா? வகுப்பறைகள் தூய்மையாக இருக்கிறதா ? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

Updated On: 31 Aug 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  4. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  8. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  9. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  10. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி