/* */

கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர்: கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டியில் கனிமொழி எம்.பியிடம் குடிநீர் பிரச்சினை குறித்து முறையிட்ட பாஜகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர்: கோவில்பட்டியில் பரபரப்பு
X

கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்ட பாஜக கவுன்சிலர் விஜயகுமார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கரிசல்குளம், துறையூரில் தலா 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை தொடக்க விழா மற்றும், கிழவிபட்டி, துறையூரில் மக்கள் குறைகள் கேட்கும் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் மக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது, கோவில்பட்டி நகராட்சியின் 20 ஆவது வார்டு உறுப்பினரான பாஜகவை சேர்ந்த விஜயகுமார், தனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்னை குறித்து கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மனுவினை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இருந்த போதிலும் பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தொடர்ந்து தன்னுடைய பிரச்னை குறித்து பேசிக்கொண்டே இருந்தார். எனது வார்டில் இருந்து தங்களுக்கு 1532 வாக்குகள் கிடைத்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் அவர் தொடர்ந்து பேசியதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையெடுத்து திமுகவினர் அவருடன் வாக்குவாதம் செய்ய முற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் விஜயகுமாரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் விஜயகுமார் தொடர்ந்து கனிமொழி எம்.பியிடம் வாக்குவாத்தில் ஈடுபடும் வகையில் பேசிக் கொண்டு இருந்தார்.

இதனால், திடீரென டென்சனான தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தம்பி ரொம்ப சீன் போடாதே என விஜயகுமாரை பார்த்து கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கனிமொழி எம்.பி.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விஜயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்தவர்களை பார்த்து எவனாவது ரிக்காட் பண்ண சொன்னானா? உங்களை என கேள்வி எழுப்பியதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Updated On: 11 Jun 2023 2:56 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...