/* */

அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் நிறுத்திவைப்பு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் நிறுத்திவைப்பு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
X

கோவில்பட்டியில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் மே தினத்தை முன்னிட்டு, அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமானகடம்பூர் ராஜூ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

தொழிலாளர்களின் எட்டு மணி நேரம் வேலை 12 மணி நேரமாக கொண்டு வர முயற்சி செய்த திமுக அரசு தொழிலாளர்களின் விரோதப் போக்கை கடைபிடிக்கும் அரசாக உள்ளது. இந்த சட்டம் கொண்டு வந்த போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர் வெளிநடப்பு செய்தால் போதுமா வாபஸ் பெற வைக்க வேண்டாமா?

சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் சித்தாந்தத்தை சிதைக்கும் சட்டத்தை வாபஸ் பெறுங்கள் எனக் கூறியிருக்க வேண்டும்.அந்த சட்டத்தை வாபஸ் வாங்காமல் இன்றைக்கு மே தினம் கூட்டம் நடத்த கம்யூனிஸ்டுகளுக்கு என்ன அருகதை இருக்கிறது.

தொழிலாளருக்கு விரோதமான சட்டத்தை வாபஸ் பெற்றால் மே தின கூட்டம் நடத்துவோம். இல்லை என்றால் கருப்பு தின கூட்டம் நடத்துவோம் என சொல்லி இருக்க வேண்டாமா. இன்றைக்கு மே தின கூட்டத்தை கம்யூனிஸ்டுகள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும். மே தின கூட்டம் நடத்துவதற்கு உரிய தகுதி அதிமுகவுக்கு மட்டும்தான் உள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதித்து. எந்த ஒரு மக்களுக்கான திட்டமும் கொண்டு வராமல், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டங்களை நிறுத்தி விட்டனர். இரண்டு ஆண்டுகளில் என்ன நல்ல திட்டங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். அடுத்த ஆண்டு மே தின கூட்டம் நடத்தும் போது அப்போது தேர்தல் நடக்கும் அது நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தக்கூடிய சூழல் நிச்சயமாக வரும்.

திமுகவின் ஊழலை வெளியிட வேலைகள் தொடங்கியாச்சு‌‌‌. முப்பதாயிரம் கோடி ஊழல் நிரூபிக்கப்படக்கூடிய ஊழலாக உள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அனைத்து ஆதாரங்களையும் அளித்துள்ளார். எனவே இந்த ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Updated On: 2 May 2023 8:07 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!