/* */

கோவில்பட்டியில் கொலை உட்பட 6 வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கொலை உள்பட 6 வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் கொலை உட்பட 6 வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் தர்மராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கோவில்பட்டி தாமஸ் நகர் ஜங்ஷன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கோவில்பட்டி மறவர் காலனி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி (21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Oct 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்