/* */

கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்தவர்கள் மீது குண்டாஸ் வழக்கு.

அபூர்வ சகோதரர்கள் இருவரும் பாளையங்கோட்டை சிறையில்...

HIGHLIGHTS

கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்தவர்கள் மீது குண்டாஸ் வழக்கு.
X

சண்முகம் - அவரது சகோதரர் கணேசன் 

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக 'ரெம்டெசிவிர்"; குப்பிகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் கடந்த மே13ம் தேதி ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை வாங்கி அதை அதிக லாபத்திற்கு விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்களான கோவில்பட்டி காந்தி நகர் நேரு நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரெம்டெசிவிர் குப்பிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆய்வாளர் சபாபதி அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் அவர்கள் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து சகோதரர்கள் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 21 May 2021 5:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...