/* */

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கல்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார்.

HIGHLIGHTS

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கல்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
X

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழை விவசாயிகளிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் அதிகளவு வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் வெற்றிலைக்கு தனி சிறப்பு உண்டு என்றே கூறலாம்.

இந்த நிலையில், ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். நபார்டு வங்கியின் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் வரவேற்பு அளித்தார். நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழை விவசாயிகளிடம் வழங்கினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆத்தூர் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

மண், காற்றுவளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணம். ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெறுகிறது. ஆத்தூர் வெற்றிலை தமிழகம் மட்டுமின்றி, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் என நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், இனிமேல் உலகளவில் மவுசு கிடைக்கும். பல்வேறு நாடுகளுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யமுடியும். வெற்றிலையில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் வாய்ப்பு உருவாகி உள்ளது என கனிமொழி எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், துணை ஆட்சியர் பிரபு, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ், புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்கள் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சீவ்காந்தி, நபார்டு வங்கி மேலாளர் மதனகோபால் தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Sep 2023 2:16 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...