/* */

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்!

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மின்சார பாதுகாப்பு குறித்த வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்!
X

தென் மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்கால அடிப்படையில் பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்இ கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக அறியப்படுகிறது. இதுதொடர்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுத்து வரக்கூடாது. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ. மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்து இருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 9498794987 என்ற செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Dec 2023 2:07 PM GMT

Related News