/* */

தூத்துக்குடி ஆயுதப்படை பிரிவில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி ஆயுதப்படை பிரிவில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
X

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாதம்தோறும் காவல் நிலையங்களுக்கு நேரடியாக செய்து திடீரென சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். மேலும், இந்த ஆய்வின்போது, காவல் நிலையங்களில் பணிபுரியம் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து அது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதும் உண்டு.

அந்த வகையில், தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போதுது, மாவட்ட ஆயுதப்படையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், பிரம்மநாயகம், கௌசல்யா ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியம் போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Updated On: 5 Dec 2023 12:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு