தூத்துக்குடி கடல் தீவுகளில் கடலோர பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனை

தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளில் கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், வனத்துறையினர் கூட்டாக சோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தூத்துக்குடி கடல் தீவுகளில் கடலோர பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனை
X

தூத்துக்குடி கடலில் உள்ள தீவுப் பகுதிகளில் சோதனை மேற்கொண்ட கடலோர காவல் படை மற்றும் குழுவினர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். வெளி நபர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதியாகவும் இந்த தீவுகள் உள்ளன.

இருப்பினும், இந்த தீவுப் பகுதிகளில் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துவோரும், இலங்கையில் இருந்து பொருட்களை கடத்தி வருவோரும் இந்த தீவுகளை பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், அன்னிய நபர்கள் சிலர் தீவு பகுதிகளில் சட்ட விரோதமாக உள்ளே நுழைந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கடத்தி செல்வதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள வான் தீவு, காரைசல்லி தீவு, காசுவாரி தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் ஏதும் நடைபெறுகிறதா? என்பதை அறியும் வகையிலும், அன்னிய நபர்களின் ஊடுருவல் உள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையிலும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்திய கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்த குழுவினர் இன்று காலை முதல் கடலோர பாதுகாப்பு குழும படகுகள் மற்றும் வனத்துறை படகில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த சோதனையில் 25-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த சோதனையின்போது வெளியாட்கள் நடமாட்டம் குறித்து ஏதும் கண்டறியப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2023 1:07 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  2. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  3. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  4. சோழவந்தான்
    சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி
  5. குமாரபாளையம்
    பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!
  6. ஈரோடு
    விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
  7. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  8. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  9. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  10. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?