/* */

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மூவர்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பறக்கவிட்டார்.

நாட்டின் 77 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனனுடன் ஜிப்பில் சென்று அவர் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 363 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகள் சார்பில், சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 54 ஆயிரத்து 790 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் 42 ஆயிரத்து 728 ரூபாய் மதிப்புள்ள இஸ்திரி பெட்டிகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், கூட்டுறவுத்துறை மூலம் 42 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு கோடியே 4 லட்சம் மதிப்புள்ள கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின்போது, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். மேலும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.

Updated On: 15 Aug 2023 5:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!