/* */

ஸ்டெர்லைட்-அடிக்கற்களை அகற்றுவது தான் மகிழ்ச்சி தரும்-எதிர்ப்பாளர்கள்.

பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வேலை வழங்கியது வரவேற்கத்தக்கது- காரணமான காவல்துறையினர் மீது எந்த வழக்கும் இல்லையே?

HIGHLIGHTS

ஸ்டெர்லைட்-அடிக்கற்களை அகற்றுவது தான் மகிழ்ச்சி தரும்-எதிர்ப்பாளர்கள்.
X

துப்பாக்கிச் சூட்டில் பலியான நபர்களுக்கு வீரவணக்க உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கற்களை அகற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சி தரும் - 3 ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மே 22ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டமைப்பினால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


அதன்படி மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன்முதலாக போராட்டத்தை தொடங்கிய கிராமமான அ.குமரெட்டியாபுரத்தில் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தலைமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தியும் துப்பாக்கிச் சூட்டில் பலியான நபர்களுக்கு வீரவணக்க உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

3 ஆண்டுகள் ஆனாலும் இந்த கொடுஞ்செயலுக்கான நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை. என்றைக்கு ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கற்கள் அகற்றப்படும் அன்றுதான் எங்கள் மக்களுக்கும் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஆத்மாவும் மகிழ்ச்சியடையும்.

அதுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி ஆலையை அகற்ற வேண்டும். மேலும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று உள்ளார்.

இதுதவிர பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கியது வரவேற்கத்தக்கது. ஆனால் இதற்கு காரணமான காவல்துறையினர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.


எனவே துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். எதிர்ப்பாளர்கள் மீது சிபிஐ சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுபோல தூத்துக்குடியில் பாத்திமா நகர், லெவிஞ்சிபுரம், சிதம்பர நகர், திரேஸ்புரம் உள்ளிட்ட இடங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க போராட்ட ஒருங்கிணைப்பாளர்களான பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, மெரினா பிரபு, ரீகன், கெபிஸ்டன் ஆகியோரின் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியான தாமோதர நகரைச் சார்ந்த கார்த்திக்கின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள மையவாடி பகுதியில் மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.






Updated On: 22 May 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...